அதிக மாத்திரைகளை தின்ற இளம்பெண் சாவு


அதிக மாத்திரைகளை தின்ற இளம்பெண் சாவு
x

வாணியம்பாடி அருகே அதிக மாத்திரைகளை தின்ற இளம்பெண் இறந்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே சின்னகொல்லகுப்பம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மனைவி சர்மிளா (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சர்மிளா வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டில் இருந்த அனைத்து மாத்திரைகளையும் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story