அதிக மாத்திரைகளை எடுத்துக்கொண்ட இளம்பெண் சாவு


அதிக மாத்திரைகளை எடுத்துக்கொண்ட இளம்பெண் சாவு
x

அதிக மாத்திரைகளை எடுத்துக்கொண்ட இளம்பெண் சாவு

விருதுநகர்

காரியாபட்டி

திருச்சுழி அருகே சவ்வாசுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் ஹரிணி (வயது 18). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் இவரது தந்தை ராமரும், தாயாரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் தாயார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஹரிணி மயக்க நிலையில் படுத்திருந்தார். அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அங்கு சுயநினைவு வந்த ஹரிணியிடம் கேட்டதற்கு வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருவதால் 20-க்கும் மேற்பட்ட வலிப்பு மாத்திரைகளை தின்று விட்டதாக கூறினார். பின்னர் ஹரிணியை விருதுநகர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஹரிணி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story