இளம்பெண் தற்கொலை

நாட்டரசன் கோட்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கையை அடுத்தநாட்டரசன் கோட்டை நக்கீரர் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் யமுனா (வயது 21). இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்தாராம். இதனால் யமுனாவை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதில் மனமுடைந்த யமுனா சம்பவத்தன்று விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யமுனா இறந்தார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





