இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

நெல்லை டவுனில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் அரசன் நகரை சேர்ந்தவர் வீரமணிகண்டன். தொழிலாளி. இவருடைய மனைவி கன்னிகாதேவி (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமடைந்த கன்னிகா தேவி வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் இந்த நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கன்னிகாதேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story