வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
இட்டமொழி வடக்குதெருவை சேர்ந்தவர் ஏசுபாலன் (வயது 26). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த ஏசுபாலன் இட்டமொழி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உள்ள வேம்பு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தாயார் பத்மாவதி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





