இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

பரமத்திவேலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

இளம்பெண் தற்கொலை

கரூர் மாவட்டம், தளவாபாளையத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 32). இவர் புகளூரில் உள்ள பேப்பர் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்திய பிரியா (28). இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சத்தியபிரியா பரமத்தி அருகே கரட்டுபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று மாலை சத்தியபிரியாவின் தாய் சாந்தி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் சத்தியபிரியா சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சத்தியபிரியா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

உதவி கலெக்டர் விசாரணை

தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆவதால் சத்தியபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story