இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2023 12:30 AM IST (Updated: 2 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் கல்யாணி (வயது 18). இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வயிற்று வலி காரணமாக கல்யாணி அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கல்யாணி வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதை அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கல்யாணியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story