இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

புளியங்குடி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே உள்ள வெள்ளானைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கற்பகச்செல்வி (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கற்பகச்செல்வி கடந்த 31-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கற்பகச்செல்வி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story