வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

கடையத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையம்:

கடையம் யோகீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் வேலு மகன் அய்யப்பன் (வயது 19). இவருடைய பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், அய்யப்பன் தனியாக வசித்து வந்தார். அப்பகுதியில் வசித்து வரும் பாட்டி கோமதி, அய்யப்பனை பராமரித்து வந்தார். அய்யப்பன் தனது பாட்டியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்தும், மாடு புரோக்கர் வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பாட்டி கோமதி, அய்யப்பனுக்கு காபி போட்டு கொண்டு சென்றார். அங்குள்ள அறையில் அய்யப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு பாட்டி அதிர்ச்சி அடைந்து அலறினார். அய்யப்பனின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அய்யப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story