இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

மானூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள மாவடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவர்களுடைய உறவினரான வாலிபர் ஒருவர் மதுபோதையில் நிர்வாண கோலத்தில் கார்த்திகாவிடம் சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கார்த்திகா தனது வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story