முட்டையுடன் வேனை கடத்திய வாலிபர் கைது


முட்டையுடன் வேனை கடத்திய வாலிபர் கைது
x

முட்டையுடன் வேனை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது40). இவருக்கு சொந்தமான சரக்கு வேனை சுந்தர்ராஜ் (28) என்பவர் ஓட்டிச் சென்று கடைகளுக்கு முட்டைகளை வினியோகம் செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று பஸ் நிலையம் அருகே வேனை நிறுத்திவிட்டு கடைக்கு முட்டை கொடுப்பதற்காக சென்றார். அப்போது முட்டையுடன் வேனை யாரோ திருடி சென்றனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லாரியை நாகர்கோவில் புதுத்தெருவை சேர்ந்த ஏழுமலை (29) என்பவர் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே வாகனங்கள் கடத்தியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Related Tags :
Next Story