கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று நாகாலம்மன் நகர், மங்கம்மாபேட்டைஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்கம்மாபேட்டை மேம்பாலத்தின் கீழ் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிரு செய்து, கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story