கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜா தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தரணி. இவரது மகன் தனுஷ்கோடி (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சிலை அருகில் சிலரிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த வாலாஜா போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் தனுஷ்கோடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story