கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

நெல்லை டவுன் பழையபேட்டை பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் காளிமுத்து (வயது 20). இவர் நேற்று காலையில் டவுன் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காளிமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story