கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

பேட்டை:

பழைய பேட்டை வாகன நிறுத்தம் பகுதியில், பேட்டை பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை (வயது 56) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துகிருஷ்ணன் (29) என்பவர் கத்தியை காட்டி வழிமறித்து ரூ.500 கேட்டு மிரட்டியதாகவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் செல்லத்துரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்தார். அவரிடமிருந்து சுமார் 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினார். பின்னர் அவரை சிறையில் அடைத்தார்.


Next Story