புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் போலீசார் அழகரசன் நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பெட்டிக்கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 62 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Related Tags :
Next Story