வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது


வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2023 3:45 AM IST (Updated: 17 Sept 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் குமரன்திருநகர் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக, வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 33) என்பவரை கைது செய்தனர்.

1 More update

Next Story