கஞ்சா வழக்கில் வாலிபர் கைது


கஞ்சா வழக்கில் வாலிபர் கைது
x

மேல்காவனூர் கிராமத்தில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

மேல்காவனூர் கிராமத்தில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு. இவரின் மகன் யுவராஜ் (வயது 20). இவர், ஏற்கனவே மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் அவருடைய வீட்டின் மாட்டுக்கொட்டகையில் 20 கிராம் எடையிலான கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா பதுக்கிய யுவராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story