போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
x

போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 35). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரகுமானை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ரகுமானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.


Next Story