கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் அடித்துக்கொலை; போலீஸ் விசாரணை


கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் அடித்துக்கொலை; போலீஸ் விசாரணை
x

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் அடித்து கொலை செய்யபட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

வாலிபர்

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பெரவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 23). இவருக்கு திருமணமாகி கார்த்திகா (21) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 14-ந்தேதி பெரவள்ளூர் ஏரிக்கரைக்கு சரத்குமார் ஆண்டார்குப்பத்தை சேர்ந்த தனது நண்பருடன் சென்றார். அங்கு சிலருடன் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரத்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பலி

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை அடித்து கொலை செய்தவர்கள் எத்தனை பேர்? நண்பர் தெரிவிக்கும் தகவல் உண்மையானதா? இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story