விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

திருவாரூர்

வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் ஊராட்சி பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் வீட்டில் வேலையில்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த மணிகண்டன் வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் ே்பரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story