விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பொள்ளாச்சி
கோவை அருகே உள்ள மேற்கு குருடம்பாளையத்தை சேர்ந்தவர் விவின்(வயது 26). இவர் கடந்த சில நாட்களாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று விவின் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மேலாளர், அறை கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது விவின் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் விரைந்து வந்து, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





