கருங்கல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


கருங்கல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 28 April 2023 7:15 PM GMT (Updated: 28 April 2023 7:15 PM GMT)

கருங்கல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள மங்கலக்குன்று கோட்டவிளையை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அமல் (வயது20). இவர் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு நிரந்தரமாக வேலை எதுவும் இல்லாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமல் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story