வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மானூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
மானூர்:
மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர், ஜோசப் மகன் சவுந்தர்ராஜ் (வயது 31). இவர் நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சவுந்தர்ராஜ், வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறி கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சவுந்தர்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





