சின்னசேலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


சின்னசேலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சின்னசேலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே ராயர்பாளையம் காமராஜர் நகர் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயி. இவருக்கு சாந்தி, செல்வி என்ற 2 மனைவிகள் இருந்தனர். இதில் சாந்திக்கு பூவராகவன்(31)என்ற மகனும், செல்விக்கு தினேஷ்(24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சாந்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு இறந்து விட்டார். இந்த நிலையில் பழனிவேல், தனது முதல் மனைவி மகன் பூவராகவனிடம் ரூ.16 லட்சம் கடன் இருப்பதாகவும், அந்த கடனை அடைக்க 4½ ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் பூவராகவன் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் கேபிள் ஒயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூவராகவனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story