வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆற்காடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த புதேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 28). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை பார்த்த போது சுந்தரராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story