வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Nov 2022 6:45 PM GMT (Updated: 13 Nov 2022 6:45 PM GMT)

தட்டார்மடம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள தச்சன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லிங்கபெருமாள் மகன் முத்துக்குமார் (வயது 31). மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி வந்த முத்துக்குமார், அவரது தாயாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் சமையல் அறைக்கு சென்று சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு திசையன்விளை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து போனதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை லிங்கபெருமாள் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story