வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த திருமலைச்சேரி கிராம ரோடு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). இவர் டிப்ளமோ படித்துவிட்டு, அரசு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story