வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தாய்-தந்தை இறந்த சோகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

காரியாண்டி அருகே உள்ள வடிவாள்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சீமான் மகன் ஜெயசுரேஷ் (வயது 35). இவருடைய தாய்-தந்தை கடந்த ஓராண்டுக்கு முன்னர் இறந்து விட்டனர். உடன்பிறந்த சகோதரரும் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

ஜெயசுரேஷ் திருமணம் செய்திருந்தார். மனைவியும் 2 மாதத்தில் பிரிந்து சென்று விட்டார். தாய், தந்தை இறந்த சோகத்தில் இருந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2 நாள் கழித்துதான் அவர் இறந்த தகவல் அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி விரைந்து சென்று பார்வையிட்டு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story