வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வேலூர் சலவன்பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூர் சலவன்பேட்டை கச்சேரிதெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் லக்னேஷ் (வயது 20), கூலித் தொழிலாளி. இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மதுஅருந்தி விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்த லக்னேஷ் மீண்டும் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.

அதனால் அவர் அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். சிறிதுநேரத்துக்கு பின்னர் இதைக்கண்ட பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், லக்னேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story