வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் வானவில் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராம்கி (வயது 33). இவரது மனைவி சுகன்யா.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுகன்யா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ராம்கி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராம்கி வீட்டில் தூக்கில் தொங்கினார்.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story