வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 May 2023 6:45 PM GMT (Updated: 20 May 2023 6:46 PM GMT)

குருவிகுளம் பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் முதலியார் தெருவை சேர்ந்தவர் மலையாண்டி. இவருடைய மகன் நாகராஜன் (வயது 25). திருமணம் ஆகவில்லை. எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்று இருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நாகராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story