வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 May 2023 5:20 PM GMT (Updated: 27 May 2023 7:53 AM GMT)

ஆரணியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் குணசேகரன் (வயது 24), கேட்டரிங் படித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாகவும், மேலும் தினமும் மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு குணசேகரனின் அண்ணன் ஞானவேல், உன்னால் தான் வீட்டில் உள்ளவர்களுக்கு மானம் போகிறது எனக்கூறி குணசேகரனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story