வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி நடுக்காலங்குடியிருப்பை சேர்ந்தவர் கோபால். இவர், உடன்குடி பஸ் நிலையம் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை உட்பட பல இடங்களில் தொழில் செய்து வந்தார், பல இடங்களில் தொழில் செய்தும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டால் சொந்த ஊரான நடுகாலங்குடியிருப்புக்கு திரும்பி வந்தார். தனக்கு தொழிலும் சரியாக அமையவில்லை, திருமணமும் நடைபெறாத விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று மணிகண்டனின் உடலை கைபற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story