காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை


காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
x

சென்னையை அடுத்த புழலில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 27). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரத்குமார், சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்குள் தூங்க சென்றார்.

நேற்று காலை சரத்குமார், புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா மற்றும் போலீசார் தற்கொலை செய்த சரத்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சரத்குமார் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story