வாலிபர் தீக்குளித்து தற்கொலை


குடியாத்தம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் அருண்குமார் (வயது 28), சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று உடலில் தீ வைத்துக் கொண்ட அவர் வலிதாங்காமல் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் இறந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story