மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
x

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

பள்ளி பஸ் மோதல்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் முத்துக்குமார் (வயது 21). இவரது நண்பர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவாரொனால்டோ (21). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்திற்கு வந்தனர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். ஜீவா ரொனால்டோ மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

முத்துக்குமார் பின்னால் அமர்ந்து வந்தார். தளவாபாளையம் அருகே மலையம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வாலிபர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஜீவா ரொனால்டோவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முத்துக்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முத்துக்குமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தப்பியோடிய பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்திய பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story