மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் சாவு


மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் இறாந்தார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகம் பெருஞ்சேரி நடுத்தெருவை சேர்ந்த இளையராஜா மகன் கார்த்திக்ராஜா (வயது20). இவர் நீண்டநாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததால் மணஉலைச்சளில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கார்த்திக்ராஜா பெருஞ்சேரி வயல்பகுதியில் உள்ள உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி மின்கம்பியை பிடித்ததில் மின்சாரம் தாக்கி கார்த்திக்ராஜா மின்கம்பத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கார்த்திக்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த ்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story