குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x

குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் விஷ்ணு(வயது 25). இவர் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு செய்துவிட்டு 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம். கடந்த 7-ந்தேதி குடும்பத்தினருடன் தகராறு செய்து விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. வழக்கம்போல் 2 நாட்கள் கழித்து வந்து விடுவார் என குடும்பத்தினர் நினைத்து அவரை தேடவில்லை. ஆனால், 2 நாட்கள் கடந்தும் விஷ்ணு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் முன்சிறை அருகே ஓச்சவிளை பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குளத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர். அப்போது, அது மாயமான விஷ்ணு என்பது தெரியவந்தது. இதற்கிடையே தகவலறிந்து வந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு குளத்தில் குளிக்க இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story