ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x

ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்தாா்

ஈரோடு

தொட்டிபாளையத்துக்கும், பெருந்துறைக்கும் இடையே செல்லும் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். போலீசாரின் விசாரணையில், கடந்த 20-ந் தேதி ரெயிலின் படிக்கட்டு அருகில் நின்று பயணம் செய்த வாலிபர் தவறி கீழே விழுந்து இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் வெள்ளை நிற சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story