லாரி மோதி வாலிபர் சாவு

கோவை அருகே லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கோவை
கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாமுத்து (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அய்யாமுத்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரான கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அப்துல் காதர் என்பவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





