கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 Jun 2023 8:45 AM IST (Updated: 7 Jun 2023 8:45 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சியை சேர்ந்தவர் சரவண மணிகண்டன் (வயது 24). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கேரளாவில் இருந்து கோவிந்தாபுரம் நோக்கி பொள்ளாச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த சையது அபுதாஹிர் என்பவர் கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சரவண மணிகண்டன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story