ரெயில் மோதி வாலிபர் பலி


ரெயில் மோதி வாலிபர் பலி
x

உளுந்தூர்பேட்டை அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை புதுதெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 34). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் ரெயில்வே கேட் பகுதியில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் மோதி படுகாயம் அடைந்த ஶ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீதரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story