பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தகட்டூர் பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கும் தலங்கள் உள்ளன. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் தை மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இதையொட்டி பைரவருக்கு பால், இளநீர், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





