கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
x

கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

கரூர்

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூைஜ நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களது நகைகளை கழற்றி பூஜையில் கொடுத்து திரும்ப பெற்று கொண்டனர்.

இதேபோல் நொய்யல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story