தேஜஸ் ரெயில் நாளை திருச்சி வரை மட்டுமே செல்லும் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தேஜஸ் ரெயில் நாளை திருச்சி வரை மட்டுமே செல்லும் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

தேஜஸ் ரெயில் நாளை திருச்சி வரை மட்டுமே செல்லும் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு குருவாயூர் செல்லும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்.16127) பராமரிப்பு பணி காரணமாக மணப்பாறை, திண்டுக்கல், சோழவரம், கூடல்நகர், மதுரை ரெயில் நிலையங்களில் நிற்காது. இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.22671) பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். திருச்சி-மதுரை இடையிலான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், அன்றைய தினம் தேஜஸ் ரெயில் (எண்.22672) மாலை 5 மணி 5 நிமிடத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story