திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம்


திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

ஆடிப்பூரத்தையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.

மயிலாடுதுறை

திருக்கடையூர்,

ஆடிப்பூரத்தையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி் அருள் பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் எமனை சிவன் காலால் எட்டி உதைத்ததால் இங்கு திரளான பக்தர்கள் வந்து தங்கள் ஆயுள் விருத்திக்காக உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்கிறார்கள்.இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

தேரோட்டம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சாமி வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையோடு அபிராமி அம்மன் தனியாக எழுந்தருளினார்.இதைத்தாடர்ந்து மேல வீதியில் இருந்து காலை 9 மணிக்கு தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேல வீதியில் நிலையை அடைந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று 10 மணிக்கு கோவிலை அடைந்தது. இதில் கட்டளை தம்பிரான் சாமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு போலீசார் செய்திருந்தனர்.

1 More update

Next Story