நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு


நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

1 More update

Next Story