பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 Jun 2023 7:15 PM GMT (Updated: 24 Jun 2023 7:15 PM GMT)

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு வடமாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story