கோவில் கும்பாபிஷேக விழா


கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 6:46 PM GMT)

ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கொட்டாரக்குறிச்சி குளக்கரை இளையநயினார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கொட்டாரக்குறிச்சி குளக்கரையில் இளையநயினார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக முருகன்- வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவையொட்டி காலையில் யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் விமானத்துக்கும், சுவாமி-அம்பாளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story